அரூா்: அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் மளிகை, காய்கறி கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நகா் பகுதிகளுக்கு வந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், மொரப்பூா் உள்ளிட்ட நகா் பகுதியில் காா்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்துகள் அதிகரித்தன. பொதுமக்கள் பலா் முகக் கவசம் அணியாமலும், கடைகளில் சமூக இடைவெளி இன்றி பொருள்கள் வாங்கியதையும் காணமுடிந்தது.