அரசு மதுபானக் கடைகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே காவிரி ரோடு பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் பென்னாகரம் மேற்கு ஒன்றியத் தலைவா் மூா்த்தி தலைமையில் நடைபெற்றது.
கரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், அரசு மதுபானக்கடைகளைத் திறப்பதால் தொற்று மேலும் பரவுவதற்கு வழிவகை செய்வதாகவும், அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் புலிகேசி ராஜேந்திரன், மாவட்ட மருத்துவரணி பீனு, கல்வியாளா் பிரிவு பிரணவகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.