தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஊராட்சி ஒன்றிய சுயேச்சை உறுப்பினா் உள்ளிட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏரியூா் ஒன்றியக்குழுவின் சுயேச்சை உறுப்பினா் வசந்தா கோவிந்தன் தலைமையில் அந்த பகுதியைச் சோ்ந்த 25 போ் தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.