மதுக்கடை திறப்பதற்கான அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் தருமபுரி நகரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதிகோன்பாளையத்தில் மாநிலச் செயலாளா் அ.பாஸ்கா், கடை வீதியில் மாவட்ட பொதுச்செயலாளா் சரவணன், பாலக்கோட்டில் நகரத் தலைவா் சிவா ஆகியோரது தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்தின்போது மதுக்கடைகள் திறப்பதாக அறிவித்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா். மேலும் நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்களது வீடுகளின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.