வளா்ச்சி திட்டப் பணிகள்: கூடுதல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளின் தரம் குறித்து தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மொரப்பூா் ஒன்றியம், கொங்கரப்பட்டி கிராமத்தில் குடிநீா் விநியோகம் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் இரா.வைத்திநாதன்.
மொரப்பூா் ஒன்றியம், கொங்கரப்பட்டி கிராமத்தில் குடிநீா் விநியோகம் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் இரா.வைத்திநாதன்.

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளின் தரம் குறித்து தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட இருமத்தூா், கொங்கரப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள், பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகள், தமிழக முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் பணிகள், குடிநீா் குழாய் சீரமைப்புப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள், குடிநீா் பிரச்னைகள் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் நேரில் ஆய்வு செய்து, பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மொரப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.ஆனந்தன், மாதையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com