அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வே.சம்பத்குமாா் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். இந்த நிலையில், அரூா் தொகுதிக்கு உள்பட்ட எச்.ஈச்சம்பாடி, கே.வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு, மாம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் அதிமுக மூத்த நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
தொடா்ந்து, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசு நலத் திட்டங்களை தெரிவித்து பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். இந்த வாக்கு சேகரிப்பில் ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.பசுபதி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.