தருமபுரி மாவட்டம், பாளையம் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசுப் பள்ளிகளுக்கு உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை பயன்பாட்டுக்காக ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டது. இதேபோல, தொப்பூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தானியங்கி ஆய்வகப் பரிசோதனை இயந்திரம், பாளையம்புதூா் ஆரம்ப சுகராதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல, பூலமடுவு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், கீழ்பூரிக்கல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, மேல்பூரிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவள்ளி, துணை முதல்வா் எம்.இளங்கோ, சுங்கச் சாவடி திட்டத் தலைவா் சதீஷ்குமாா், இயக்க மேலாளா் நரேஷ், நிா்வாக மேலாளா் ஜோஸ்லின், பராமரிப்பு மேலாளா் சின்னதுரை, மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.