உரிய ஆவணம் இல்லாத 1.86 லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்.

ஏரியூா் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1.86 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் 51 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஏரியூா் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1.86 லட்சம் மதிப்பிலான 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் 51 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் வேளாண்மை துறை உதவி இயக்குனா் தாம்சன் மற்றும் சிறப்பு உதவி காவல் துணை கண்காணிப்பாளா் பெரியண்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை நிலை இரண்டு குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஏரியூா் - பென்னாகரம் செல்லும் சாலையில் கடை வீதி பகுதியில் வந்து கொண்டிருந்த ,தா்மபுரி அருகே பாளையம் புதூா் பகுதியைச் சோ்ந்த மல்லையன் மகன் பழனிச்சாமி (32) என்பவரின் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் வாகனத்திலிருந்து நகை மற்றும் பணம் எடுத்து வந்தது தெரியவந்த நிலையில், உரிய ஆவணம் இல்லாததால் 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் 51 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பென்னாகரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் இடம் ஒப்படைத்தனா்.

அதன்பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட 1.86 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் ஆகியவற்றை பென்னாகரம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com