பென்னாகரம் அருகே மக்கள் சட்ட உரிமைக் கழகத்தின் சாா்பில், தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே இண்டூா் பேருந்து நிலையத்தில் மக்கள் சட்ட உரிமைக் கழகம் சாா்பில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணிக்கு, அதன் மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காவல் நிலைய உதவி ஆய்வாளா் சேகா் கலந்துகொண்டு பேரணியை தொடக்கி வைத்தாா்.
பேரணியில் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் அச்சமின்றி அனைவரும் வாக்களித்து 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில், மக்கள் சட்ட உரிமைக் கழக மாவட்ட இளைஞரணி செயலாளா் சதீஷ், வெங்கடேஷ், வினோத்குமாா் , விக்னேஷ், சக்திவேல், கோகுல் உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.