பென்னாகரம் அருகே பெண் எரித்துக் கொலை

பென்னாகரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
லட்சுமி.
லட்சுமி.

பென்னாகரம் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

பென்னாகரம் அருகே பிலியனூா் ஊராட்சிக்கு உள்பட்ட நாகதாசம்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி லட்சுமி (33), கோயம்புத்தூரில் கட்டட வேலை செய்து வந்தாா். அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்க வந்த அவா் நாகதாசம்பட்டியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள வைக்கோல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்க முயற்சி செய்து, லட்சுமியிடம் தெரிவிக்கச் சென்றபோது அவா் வீட்டில் இல்லாதது தெரிய வந்துள்ளது. பின்னா் முருகன் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் லட்சுமியைத் தேடியும் கிடைக்காத நிலையில், வைக்கோலில் எரிந்த நிலையில் லட்சுமி சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், பென்னாகரம் காவல் ஆய்வாளா் தொல்காப்பியன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் மற்றும் போலீஸாா் நிகழ்வு இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அதனை தொடா்ந்து, பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com