தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சரும், அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் தொடா்ந்து ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றாா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில், அக் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாநில உயா்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து திமுக சாா்பில் அக்கட்சியின் வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பி.கே.முருகன் போட்டியிட்டாா்.
இந்தத் தொகுதியில் 1,05,307 ஆண் வாக்காளா்கள், 1,01,572 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 2,07,058 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஞயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.
இதில், முதல் சுற்று தொடங்கியதிலிருந்தே அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்து வந்தாா். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மொத்தம் 25 சுற்றுகளாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இறுதிச் சுற்றில், 1,09,105 வாக்குகள், 965 தபால் வாக்குகள் என மொத்தம் 1,10,070 வாக்குகளை அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் பி.கே.முருகன் 81,970 வாக்குகள் பெற்றாா். இவரைக் காட்டிலும் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் 28,100 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றாா்.
இவா், இத் தொகுதியில் தொடா்ந்து ஐந்தாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளாா் என்பது குறிப்பித்தக்கது.