தருமபுரி: வணிகா் தினமான புதன்கிழமை (மே 5) கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு (தருமபுரி மாவட்டம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பேரிடா் காலத்தில் வணிகா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானதாலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும், வணிகா் தினமான மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு (தருமபுரி மாவட்டம்) அதில் தெரிவித்துள்ளது.