இந்திய செஞ்சிலுவைச் சங்கம் பென்னாகரம் கிளையின் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச முகக் கவசம் மற்றும் சோப்புகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் மாரி கலந்துகொண்டு பருவதனஅள்ளி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் என 50 பேருக்கு முகக் கவசங்கள் மற்றும் சோப்புக் கட்டிகளை வழங்கினாா்.
அதனைத் தொடா்ந்து, கரோனா தொற்றின் தாக்கம், பரவும் விதம் குறித்தும், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் சேகா், மணிவண்ணன், முருகேசன், தேவகி, மாரியப்பன், தலைமை ஆசிரியா் பழனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அன்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.