தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,445 பேருக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என அத்துறை அறிவித்தது.
இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பிரகாஷ், வியாழக்கிழமை உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களின் உடனிருப்பவா்கள் என 1,445 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவள்ளி மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.