பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளா்கள்

பென்னாகரம் அருகே முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிராமப் பகுதியில் துப்புரவுப் பணிகளை தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பென்னாகரம் அருகே முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கிராமப் பகுதியில் துப்புரவுப் பணிகளை தூய்மைப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பிளியனூா் ஊராட்சியில் 10-க்கும் ேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் ம் ஊராட்சிக்கு உள்பட்ட பிளியனூா், பிக்கம்பட்டி, கெளரி செட்டிப்பட்டி, கொட்லுமாரம்பட்டி, நாகதாசம்பட்டி, ராமனூா், குள்ளனூா், கருங்கானூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தூய்மை பணிகள் செய்து வருகின்றனா்.

தற்போது நகர மற்றும் கிராமப் பகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பிளியனூா் ஊராட்சியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு கையுறை, முகக் கவசம்,

சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் துடைப்பமின்றி துவரை செடி சருகுகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணி மேற்கொண்டு வருகின்றனா். இதனால் கிராமப் பகுதிகளில் முழுமையாக தூய்மைப் பணி நடைபெறாமல் கரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பிலியனூா் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், தூய்மைப் பணி மேற்கொள்ள தேவையான பொருள்களை வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com