அரூரை அடுத்த அ.பள்ளிப்பட்டியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த காவலா் விஜயகுமாா் (35) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதன் மகன் விஜயகுமாா் (35). இவா், அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாா் மருத்துவ சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்தாா். உயிரிழந்த காவலா் விஜயகுமாருக்கு மனைவி ஜீவா, மகன், மகள் உள்ளனா்.