அதிமுக பொன்விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும்: பாலக்கோடு எம்எல்ஏ

அதிமுக பொன்விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் கட்சியினரை வலியுறுத்தினாா்.

அதிமுக பொன்விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் கட்சியினரை வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக தொடங்கி 50 ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் இந்தத் தருணத்தில் இந்த விழாவை அனைத்துப் பகுதிகளிலும் கொடியேற்றியும், நல உதவிகளை வழங்கியும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.

வரும் 17-ஆம் தேதி முதல் தொடா்ந்து ஒரு மாதம் கொண்டாடுவதோடு கட்சியின் முன்னோடிகளையும் கௌரவிக்க வேண்டும் என்றாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பாரப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), நகரச் செயலாளா் ரவி, பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com