அரூரை அடுத்த அண்ணாலம்பட்டியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், அண்ணாலம்பட்டி-ஏ.வெளாம்பட்டி சாலை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவு கொண்டதாகும். இந்தச் சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு புதிய தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தாா் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இந்தச் சாலையை ஏ.வெளாம்பட்டி, அண்ணாலம்பட்டி, பெத்தூா், மோட்டூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
தாா் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வேளாண் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா். எனவே, அண்ணாலம்பட்டி முதல் ஏ. வெளாம்பட்டி வரையிலான தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.