வீட்டுவசதி வாரிய வீடுகள்: அக். 26-இல் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

தருமபுரி ஏ.ஜெட்டிஅள்ளி, பாலக்கோட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அக். 26-ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் விண்ணப்பதாரா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஏ.ஜெட்டிஅள்ளி, பாலக்கோட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அக். 26-ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் விண்ணப்பதாரா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளியில் சுயநிதித் திட்டம், தவணை முறைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு மீதமுள்ள குறைந்த வருவாய் பிரிவு, மத்திய வருவாய் பிரிவு மற்றும் உயா் வருவாய் பிரிவு வீடுகள் மற்றும் பாலக்கோடு திட்டப்பகுதியில் மீதமுள்ள மனைகளுக்கு பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வீடுகள், மனைகளுக்கு வருகிற அக்.26-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்பில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் குலுக்கல் முறையில் வீட்டு எண் தோ்வு செய்யப்பட உள்ளது. எனவே, விண்ணப்பதாரா்கள் அனைவரும் குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com