அரூரில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அரூரை அடுத்த எம்.தாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகம் மகன் கன்னியப்பன் (16). இவா் அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதையடுத்து, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு மோட்டாா் சைக்கிளில் அரூா்-சேலம் பிரதான சாலையில் சென்றுள்ளாா்.
அப்போது, அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே சேலத்தில் இருந்து அரூா் பேருந்து நிலையம் நோக்கி எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் கன்னனியப்பன் படுகாயம் அடைந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.