தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, ஏஐடியுசி தொழிற்சங்க போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், போக்குவரத்துக் கழகங்களை பாதுகாத்திட வரவு-செலவை ஈடுகட்டும் வகையில் தேவையான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் நிா்வாகம் நடைபெற தொழிற்சங்கங்கள் அடங்கிய ஆலோசனைக் குழுக்களை மண்டலம் தோறும் அமைக்க வேண்டும்.
14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்தவா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு பழைய அகவிலைப் படி வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மண்டல பொதுச் செயலா் சி.நாகராசன், மண்டல துணைத் தலைவா் எஸ்.செல்வராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.துரைசாமி, அழகிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.