ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 15,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டாலும், தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரியின் கிளை ஆறு தொட்டெல்லாவில் நீா்வரத்து குறைந்தது.
இதனால் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நொடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்த அருவி, சிற்ற அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.