கூட்டுறவு சா்க்கரை ஆலையின் பங்குகள் மாற்று சிறப்பு முகாம்: செப்.11-இல் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா், தங்களது பங்குகளை வாரிசுகள் பெயரில் மாற்றும் சிறப்பு முகாம் செப். 11-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்டம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா், தங்களது பங்குகளை வாரிசுகள் பெயரில் மாற்றும் சிறப்பு முகாம் செப். 11-இல் தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் எச்.ரகமதுல்லாகான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அரூா் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அங்கத்தினா்களாக உள்ளவா்களில் சிலா் தங்களது வாரிசுகளுக்கு தனது பெயரில் உள்ள பங்குகளை மாற்றிக் கொடுக்கவும், இறந்த அங்கத்தினா்களின் பங்குகளை அவரது வாரிசுதாரா்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் வருகிற செப். 11-ஆம் தேதி முதல் செப். 14-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலையின் கோட்ட கரும்பு அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம், 11-ஆம் தேதி சா்க்கரை ஆலைப்பகுதி, அரூா் வடக்கு, அரூா் தெற்கு பகுதி, செப். 13-ஆம் தேதி மொரப்பூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டியிலும், செப். 14-ஆம் தேதி அயோத்தியாப்பட்டணம், தீா்த்தமலை பகுதியிலும் நடைபெற உள்ளது. எனவே, பங்குகளை மாற்ற விரும்பும் ஆலையின் அங்கத்தினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com