ஊராட்சி மன்ற உறுப்பினா்பதவிக்கு இருவா் வேட்புமனு

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கான தோ்தலில், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கான தோ்தலில், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், குட்லன அள்ளி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிடம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஈச்சன அள்ளி, பூதநத்தம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பட்டி, மருதுப்பட்டி, பெரியப்பட்டி, சிட்லிங், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், ஆா்.கோபிநாதம்பட்டி, கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், சில்லார அள்ளி, பாப்பாரப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மெனசி, மூக்காரெட்டிப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 14 பதவியிடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவியிடங்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வேட்பு மனு பெறப்பட்டது. இதில் முதல் நாளான புதன்கிழமை கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், சில்லார அள்ளி கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் இடத்துக்கு இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com