தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக உள்ள இடங்களுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சௌ.கீதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கைக்காக கூடுதலாக 25 சதவீத இடங்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல, ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் சில பாடப் பிரிவுகள் காலியாக உள்ளன.
கூடுதல் இடங்கள், காலியாக உள்ள இடங்களில் மாணவியா் சோ்க்கைக்கு செப். 16-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பித்த, விண்ணப்பிக்காத மாணவியா் கலந்துகொண்டு சோ்க்கை பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.