பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் அனல் காற்று நீங்க குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியது. இந்த நிலையில் வேலூா், பரமத்தி, பொத்தனூா், பாண்டமங்கலம், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.