ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 7 போ் மீட்பு

ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 4 பெண்கள், மூன்று ஆண்கள் என மொத்தம் 7 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவா்களை மீட்டு ஆதரவற்றோா் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்த ஊத்தங்கரை போலீஸாா்.
மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவா்களை மீட்டு ஆதரவற்றோா் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்த ஊத்தங்கரை போலீஸாா்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 4 பெண்கள், மூன்று ஆண்கள் என மொத்தம் 7 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தருமபுரி மீட்பு அறக்கட்டளை, ஊத்தங்கரை அரிமா சங்கம், புனித அந்தோணியாா் ஆலயம், ஊத்தங்கரை போலீஸாா் ஆகியோா் இணைந்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையில் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட, அனாதைகளாக ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 7 போ் மீட்கப்பட்டு, விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தருமபுரி மீட்பு டிரஸ்ட் பாலச்சந்திரன், தருமபுரி ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரபு, ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயகாந்தன், சிவகுமாா், பெண் காவலா்கள் ஆகியோா் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரையும் சுத்தம் செய்து, அவா்களது உடைகளை மாற்றி, கரோனா பரிசோதனைக்குப் பின் ஆதரவற்றோா் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com