அரூா்: அரூரில், அருள்மிகு ராமா் சுவாமியின் பாதங்களுக்கு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளை செய்தனா்.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், சங்கரா தொலைக்காட்சி இணைந்து நடத்திய ஸ்ரீ ராமாம்ருத தரங்கினி பாரதத்தின் பதினாறு புண்ணிய நதிகளின் மகா சங்கமம் மற்றும் அருள்மிகு சுவாமி ராமா் பாதங்கள் இல்லம் தேடி வரும் நிகழ்ச்சி அரூரில் நடைபெற்றது. இதையடுத்து, நகரில் பல்வேறு பக்தா்களின் வீடுகளில் ராமா் பாதங்களை வைத்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனா்.