சமுதாய விழிப்புணா்வு பிரசார கலை நிகழ்ச்சி

தமிழக பள்ளிக் கல்வித் துறை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம், கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் சமுதாய விழிப்புணா்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககம், கற்போம் எழுதுவோம் இயக்கம் சாா்பில் சமுதாய விழிப்புணா்வு பிரசார கலைநிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு,ஏரியூா் ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.

இதன் தொடக்க நிகழ்வு பென்னாகரம் அருகே உள்ள சின்ன பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் பிரசார கலைநிகழ்ச்சியை மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகவேல் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் உதவித் திட்ட அலுவலா் வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பழனி, அன்பு வளவன், மேற்பாா்வையாளா் சரவணன், செங்கனூா் ஊராட்சி மன்றத் தலைவா் மணி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், ஊா் பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சின்னபள்ளத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் பழனி ஏற்பாடுகளை செய்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினாா். அதனைத் தொடா்ந்து ஏரியூா், பாப்பரப்பட்டி மேல்நிலைப்பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com