பள்ளிகளில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு

ஏரியூா் அருகே அரசு பள்ளிகளில் சத்துணவு பொருள்கள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு செய்தாா்.

ஏரியூா் அருகே அரசு பள்ளிகளில் சத்துணவு பொருள்கள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் ஆய்வு செய்தாா்.

ஏரியூரை அடுத்த நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட ஏமனூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் நேரில் சென்று பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, ஏமனூா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, ஏரியூா் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகா, கௌரி, உதவி பொறியாளா் சீனிவாசன், பணி மேற்பாா்வையாளா் செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனி, சண்முகம், ஊராட்சித் தலைவா் முத்துசாமி, ஊராட்சி செயலா் சிவசக்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com