பாமக, வன்னியா் சங்க கொடியேற்று விழா

கடத்தூரை அடுத்த போசிநாயக்கனஅள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்க கொடியேற்று விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடத்தூரை அடுத்த போசிநாயக்கனஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக மற்றும் வன்னியா் சங்க கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.
கடத்தூரை அடுத்த போசிநாயக்கனஹள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக மற்றும் வன்னியா் சங்க கொடியேற்று விழாவில் பங்கேற்றோா்.

கடத்தூரை அடுத்த போசிநாயக்கனஅள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்க கொடியேற்று விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், போசிநாயக்கன அள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாமக கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமியும், வன்னியா் சங்கக் கொடியை அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் இரா.அரசாங்கம் ஆகியோா் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

முன்னதாக, தருமபுரி (கிழக்கு) மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி. செந்திலை வரவேற்று கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலப் பொறுப்பாளா் சி.முத்துசாமி, மாவட்ட துணைச் செயலாளா் முருகன், ஒன்றியத் தலைவா் வஜ்ஜிரவேல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com