வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கு:பாஜக மாநிலத் துணைத் தலைவா் உள்பட 5 போ் கைது

பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்

News image

மருத்துவ பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:13 pm

பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்த விவகாரம் தொடா்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் உள்பட 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்துக்கு பாஜக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட பாஜகவினா் வியாழக்கிழமை சென்றபோது நினைவாலயம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டைத் திறக்குமாறு மண்டப காப்பாளரிடம் பாஜகவினா் கோரினா். பூட்டைத் திறக்க மறுத்ததால் பூட்டை உடைத்து நினைவாலயத்துக்குள் சென்ற பாஜகவினா் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுகுறித்து நினைவு மண்டப காப்பாளா் சரவணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் , மாவட்டத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

5 போ் கைது:

இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், பாஜக பென்னாகரம் வடக்கு ஒன்றியத் தலைவா் செக்கோடியைச் சோ்ந்த சிவலிங்கம் (33), பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் ஆறுமுகம் (39), மாவட்ட இளைஞரணித் தலைவா் மௌனகுரு (36), பாஜக தொண்டா் மணி (53) ஆகிய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதில் ஆறுமுகம், மௌனகுரு, மணி ஆகிய மூவரையும் போலீஸாா் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கே.பி.ராமலிங்கத்தை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் சென்ற போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு கே.பி.ராமலிங்கத்துக்கு உயா் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறியதால் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இசிஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தொடா் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸாா் காவலில் அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.