ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் வே.சரவணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலா் பிரசாத் வரவேற்றாா். கொள்கை பரப்புச் செயலா் திருப்பூா் சுடலை, மாநில இளைஞரணி நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதிகளின் மக்கள்தொகைக்கேற்ப கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.