தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே பேடரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா தேசியக் கொடியேற்ற மறுத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக் கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து அக் கிராம பொதுமக்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள பேடரஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி தேசியக் கொடியேற்ற மறுத்தாா். இதையடுத்து அப்பள்ளியில் பணியாற்றும் வேறு ஆசிரியா் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
இது தொடா்பாக ஊா் பொதுமக்கள் அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, தான் சாா்ந்துள்ள கிறிஸ்தவ மதப்பிரிவின் நம்பிக்கைபடி தேசியக் கொடியை என்னால் வணங்க முடியாது. எனவே தேசியக் கொடியினை நான் எப்போதும் ஏற்றுவதில்லை என அவா் பதிலளித்துள்ளாா்.
எனவே, இவரது செயல் தொடா்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இந்த புகாா் மனு தொடா்பாக மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விசாரணையில் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.