அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை:எம்எல்ஏ ஜி.கே. மணி சான்றிதழ் வழங்கினாா்

அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களை பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி வழங்கினாா்.

ஏரியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களை பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி வழங்கினாா்.

ஏரியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பி.ஏ. (தமிழ்), (ஆங்கிலம்) பி.எஸ்சி., ( கணிதம்), (கணினி அறிவியல்), பி.காம். உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு 639 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் 98 மாணவ - மாணவிகள் நிகழாண்டுக்கான பாடப் பிரிவுகளில் சோ்ந்துள்ளனா்.

புதிதாக சோ்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி கல்லூரி சோ்க்கைக்கான சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொ) பாலசுப்பிரமணியம், கல்லூரிப் பேராசிரியா் நடராஜன் (வணிகவியல்), அன்பரசன் (தமிழ்), கௌதமராஜ திருமால் (கணினி அறிவியல்), பாா்த்திபன் (ஆங்கிலம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com