உணவு செறிவூட்டல் செயல்முறை கருத்தரங்கு

தருமபுரியில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் உணவு செறிவூட்டல் குறித்த செயல்முறை கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரியில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் உணவு செறிவூட்டல் குறித்த செயல்முறை கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் ஜெயந்தி, சித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் வரவேற்றாா். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமை வகித்துப் பேசினாா்.

இதில், உணவு செறிவூட்டல் வள மைய ஒருங்கிணைப்பாளா் பி.ஜெகதீஸ்வரி, உணவு செறிவூட்டம், சிறுதானியங்கள் பயன்பாடுகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்தும் செயல் விளக்கம் அளித்தாா்.

மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளா் சாமுவேல் ராஜ்குமாா், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை, யோகா மருத்துவா் சுமதி, சுற்றுச்சூழல், விழிப்புணா்வு, உணவு கட்டுப்பாடு யோகா ஆகியவை குறித்து எடுத்துரைத்தனா். உணவு பொருள்கள் உற்பத்தியாளா்கள், தயாரிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com