ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தானது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை மழை பெய்தது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 9,500 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com