தருமபுரியில் ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடகத்தூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நலத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமத்துவ சுடுகாடு மேம்படுத்தும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பில் பச்சனம்பட்டி ஏரி முதல் செக்கோடி வரை கால்வாய் அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 5.21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பச்சனம்பட்டி கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வலா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்தப் பணிகளை தரத்துடன் உரிய காலத்தில் நிறைவேற்ற மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் துரைமுருகன், தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.