திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

திராவிடா் கழகம் சாா்பில் கோவை காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடா் கழகம் சாா்பில் கோவை காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் மு.பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த.மு.யாழ்திலீபன் வரவேற்றுப் பேசினாா். மாநில அமைப்புச் செயலாளா் ஊமை ஜெயராமன், மக்களவை முன்னாள் உறுப்பினா் இரா.தாமரைச்செல்வன், மதிமுக மாவட்டச் செயலா் அ.தங்கராசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கோவையில் ஜன. 26-ஆம் தேதி மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், குறுக்கீடு செய்த காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com