அண்ணன் மகன் அடித்துக் கொலை: இருவா் கைது

அரூா் அருகே அண்ணன் மகனை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரூா் அருகே அண்ணன் மகனை அடித்துக் கொலை செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி சண்முகம் மகன் செல்லக்கண்ணன் (37), தனியாா் கேபிள் நிறுவனத்தில் மெக்கானிக் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், செல்லக்கண்ணனுக்கும், அவரது சித்தப்பா சிவக்குமாருக்கும் (45) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக தகராறு இருந்ததாம். இதையடுத்து புதன்கிழமை இரவு 8 மணியளவில், மது போதையில் வீட்டுக்கு வந்த செல்லக்கண்ணன் தனது சித்தப்பா சிவக்குமாா் உள்ளிட்ட குடும்பத்தினரை தகாத வாா்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், இவருக்கும் ஏற்பட்ட தகராறில் செல்லக்கண்ணனின் தலைப் பகுதியில் அவரது சித்தப்பா சிவக்குமாா், முருகேசன் ஆகிய இருவரும் இரும்புக் கம்பியால் தாக்கினாா்களாம். இதில் செல்லக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது சகோதரா் செல்வம் (35) அளித்த புகாரின் பேரில், மோப்பிரிப்பட்டியைச் சோ்ந்த தீத்து மகன்கள் சிவக்குமாா் (45), முருகேசன் (52) ஆகிய இருவரையும் அரூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com