சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உத்ஸவம்

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

இக் கோயில் தைப்பூசத் தோ் திருவிழா கடந்த 14-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிரகாரத்தில் சுவாமி உத்ஸவம் நடைபெற்றது.

இத் திருவிழா நிறைவு விழாவையொட்டி கொடியிறக்கப்பட்டது. இதையொட்டி கோயில் வளாகத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்ரமணிய சுவாமி எழுந்தருளினாா்.

நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதால் வாகன உத்ஸவம், திருவீதி உலா, தெப்ப உத்ஸவம் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com