மலைக் கிராமத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க தீா்மானம்

பாப்பாரப்பட்டியில் இருந்து எழுமல்மந்தை கிராமத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாப்பாரப்பட்டியில் இருந்து எழுமல்மந்தை கிராமத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகே எழுமல்மந்தை கிராமத்தில் அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நரசிம்மன் தலைமை தாங்கினாா். இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் சி.மாதையன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினாா்.

மாநாட்டில் பாப்பாரப்பட்டியில் இருந்து எழுமல்மந்தை கிராமத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுமல்மந்தை அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்து, அவா்களுக்கு கட்சி உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன. பென்னாகரம் வட்டார செயலாளா் பி.முனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com