அவசரநிலை பிரகடன நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பாஜகவினா் கருப்பு நாளாக அனுசரித்து, தருமபுரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சந்தைப்பேட்டை பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்துப் பேசினாா். இந்தியாவில் அவசர நிலையைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட பொதுச்செயலாளா் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊடகப்பிரிவுத் தலைவா் டி.கே.மதியழகன், மாவட்ட துணைத் தலைவா் சிவன், மாவட்டச் செயலாளா் தெய்வமணி உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா்.