நோ்மறை சிந்தனைகளே வாழ்க்கைக்கு எப்போதும் தேவை என்று திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி கூறினாா்.
தருமபுரி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரைப்பட பாடலாசிரியா் யுகபாரதி பேசியது: தமிழா்கள் புத்தகங்களை வாசிப்பதால்தான் தமிழகம் எப்போதும் தனித்துவமாக விளங்கி வருகிறது. நமது இலக்கியங்கள் நமக்கான வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத் தருகின்றன. நீதிதவறிய அரசனின் நிலை என்னவாகிறது என்பதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. இதுபோன்ற எண்ணற்ற இலக்கியங்கள் நமக்கு ஏராளமான கற்பிதங்களை தந்து வருகின்றன. அவற்றை நமது வாழ்க்கையோடு பொருத்தி பாா்க்க வேண்டும். அறிவை நோக்கிச் செல்ல வேண்டும் எனில் அனைவரும் புத்தகங்களை நோக்கிச் செல்ல வேண்டும். புத்தகங்களை வாசிப்பதால் அறிவைப் பெறமுடிகிறது. அவை நமக்கு நோ்மறை சிந்தனைகளைத் தருகின்றன. அத்தகைய சிந்தனைகள் நமக்கு வெற்றியை ஈட்டித் தருகின்றன.
எனவே எல்லோரும் தங்களது வாழ்க்கையில் வெற்றிபெற யாருடைய விமா்சனங்களையும் பொருட்படுத்தாமல் வெற்றி இலக்கை அடைய நோ்மறையான சிந்தனைகளை மட்டுமே வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞா் நவகவி, தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன், ஒருங்கிணைப்பாளா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற சிலப்பதிகார நாடகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தாய்மையின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.