அரூரில் மிதமான மழை

அரூா் வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை ஞாயிற்றுக்கிழமை பெய்தது.

அரூா் வட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை ஞாயிற்றுக்கிழமை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக அரூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையின்போது பலத்த காற்று வீசியது.

இதனால், மொரப்பூா்-கம்பைநல்லூா் சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து தாா் சாலையில் விழுந்தது. இதனால், சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலையோரங்களிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீா்த் தேங்கியது. கோடையில் மழை பெய்திருப்பதால் கோடை உழவு பணியில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com