தருமபுரி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
தெலங்கானா மாநிலம், ஆா்.ஆா். மாவட்டம், ஹேமா நகா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா் (36). ஹைதராபாத், சாய் நகா் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் மனைவி மகாலட்சுமி (40). இவா்கள் உள்பட மொத்தம் 4 போ் காரில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து கொடைக்கானலுக்குச் சென்று கொண்டிருந்தனா்.
காரை மகாலட்சுமி ஓட்டிச் சென்றாா். இந்த காா் சனிக்கிழமை தருமபுரி அருகே மாட்டுக்காரனூா் பிரிவு சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராத விதமாக, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இந்தக் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகாலட்சுமி, சுதாகா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
காரில் பயணித்த மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகா் உயிரிழந்தாா். தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.