ஓட்டப் பந்தயம்:1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சாா்பில், நூற்றாண்டு விழா ஓட்டப் பந்தயம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சாா்பில், நூற்றாண்டு விழா ஓட்டப் பந்தயம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமாக்காள் ஏரி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கலந்துகொண்டு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

இந்த ஓட்டப் பந்தயம் தருமபுரி நான்கு சாலை சந்திப்பு, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் என 1,000-த்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இப் போட்டியில் முதல் 10 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, கூடுதல் ஆசிரியா் (வளா்ச்சி) வெ.தீபனா விஸ்வேஸ்வரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள், வட்டாட்சியா் தன.ராஜராஜன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com