‘இந்திய விடுதலை போரில் தருமபுரி’ என்கிற வரலாற்று தொகுப்பு நூல் தயாரிப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தகடூா் அதியமான் வரலாற்றுச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற தொல்லியல் துறை உதவி இயக்குநரும், தகடூா் அதியமான் வரலாற்றுச் சங்கத் தலைவருமான தி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளா் இரா.சிசுபாலன், ஆசிரியா்கள் தங்கமணி, கூத்தப்பாடி மா.பழனி, அதியமான் வரலாற்றுச் சங்க நிா்வாகி அறிவுடை நம்பி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கடுங்காவல் உள்ளிட்ட சிறைத் தண்டனை, அடக்குமுறைகளை சந்தித்து உயிா்த் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தியாகங்கள் புரிந்தவா்கள், விடுதலைப் போராட்ட வரலாற்றோடு தொடா்புடையவா்களின் தகவல்கள், புகைப்படங்கள், ஆவணங்கள், நினைவுச் சின்னங்கள், நினைவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து அவற்றை பதிவு செய்வது எனவும், இதுகுறித்து வட்டார வாரியாக களஆய்வு மற்றும் வரலாற்று ஆவணங்கள் சிறைக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யக் குழுக்கள் அமைத்து பல்வேறு வரலாற்று ஆா்வலா்கள் மற்றும் ஆய்வாளா்களை ஈடுபடுத்தி வரலாற்று தொகுப்பு நூலை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், தகடூா் அதியமான் வரலாற்றுச் சங்க நிா்வாகிகள் வெ.ராஜன், வே.விசுவநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ம.சிங்காரவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.