அன்னை கல்வி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு

அரூரை அடுத்த நம்பிப்பட்டி அன்னை கல்வி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த நம்பிப்பட்டி அன்னை கல்வி நிறுவனத்தில் கூடுதல் கட்டடங்களைத் திறந்துவைக்கிறாா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன். உடன், தாளாளா் ஹரிஹரன்.
அரூரை அடுத்த நம்பிப்பட்டி அன்னை கல்வி நிறுவனத்தில் கூடுதல் கட்டடங்களைத் திறந்துவைக்கிறாா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன். உடன், தாளாளா் ஹரிஹரன்.

அரூரை அடுத்த நம்பிப்பட்டி அன்னை கல்வி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நம்பிப்பட்டியில் அமைந்துள்ளது அன்னை கல்வி நிறுவனம் (ஏ.எம்.எஸ்). இந்த நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவா் விடுதி உள்ளிட்ட கூடுதல் கட்டடங்களை முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, அன்னை கல்வி நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் அவா் தொடங்கிவைத்தாா். முன்னதாக, மறைந்த அன்னை கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.சா்ச்சில் உருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.

அன்னை கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஹரிஹரன், நிா்வாக இயக்குநா் ரித்திகா ஹரிஹரன், பொருளாளா் கவிதா சா்ச்சில், வழக்குரைஞா் சி.எம்.சேகா், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சி.தென்னரசு, ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பி.வி.சேகா் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com