தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே வனப்பகுதியில் கிடைந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா்.
தொப்பூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரி கோம்பை வனப்பகுதியில் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் சுதாகா், தொப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் யமுனா தேவி மற்றும் போலீஸாா், அப்பகுதி சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், வனப்பகுதியில் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அத் துப்பாக்கிகளை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாள்கள் முன்பு இதேபோல 3 நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.